தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

வராதே



எவ்வளவு தூரம் முடியுமோ?
அவ்வளவு தூரம் வெறுக்கிறேன் !
இனி வராதே !
என் வழியிலும் வாழ்க்கையிலும் !
என்று சொல்லத்தான் ஆசை !
எனை பிரிந்து நீ தனியாய் திரியும்,
எல்லா மணித்துளியிலும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தேவதை வாசம்



நான்,
தேவதையோடு பலகித்தொலைத்து,
தெருவெல்லாம் தேடியலைந்தவன் !
சத்தியமாய்த் தெரியாது !
அவர்களுக்கு !
இங்கே வந்துபோகமட்டுமே உரிமை !
வாழ்வதற்கு அல்ல என்று !
காதலில் கதகளி ஆடியது எனது தவறே !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மனப்பரப்பு



காயப்படுத்தினாய் !
என் கடற்பரப்பை !
உன் கொடூர கொந்தளிப்பால் !
மண்டியிட்டு சரிந்தேன் மனது கனத்து !
தலைதடவி ஆறுதல் சொன்னது !
சில சின்னச்சின்ன அலைகள் !
அதுவெல்லாம் மூழ்கடித்தது எனை !
நீ என்னை முகர்ந்து தந்த முத்தங்களின் சாயலில் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியால்



உன் வலிகளை,
நீ தனிமையில் விவரித்தபோது,
என் விழிகள் பழுதுபட்டது !
அங்கே !
மொழிகள் பெரிதாய் உதவவில்லை !
என் ஆறுதலையும் அரவணைப்பையும்,
அன்பாய் வெளிப்படுத்த !
மாறாய் மதகுடைத்த வெள்ளமாய்,
நான் மனதுக்குள் அழத்தொடங்கியிருந்தேன் !


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் கல்லறையில்



மனத்தால் உனைத்தாங்கி
கவிதையாய் தாலாட்டி
நீ உறங்க கண்விழிப்பேன்
தினம்தோறும் உன்னை காதலிப்பேன்
என் கல்லறையில் எழுதி வைப்பேன்
காதல் சுகமானது என்று.!! -காதலுடன்


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் நட்பு



சொல்ல முடியாத ஒர் உணர்வு !
ஊவமை சொல்ல முடியாத கவிதை !
நமக்காக துடிக்கும் ஒர் உயிர் !
கனவுகளை நனவாக்கும் ஒர் நவீனம் !
உறவுகள் இல்லாத உறவு !
ரத்தபந்தங்கள் இல்லாத சொந்தம் !
வானத்து நட்சத்திரம் !
பொறாமை இல்லாத உயிர் !
அனாதை என்ற வார்த்தையை அழிக்கும் உயிர் !
எனக்காக கடவுள் கொடுத்த இன்னொரு உயிர் !

என் நட்பு. . . .            - கவிதைகள் உலகம்..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ எழுதுவதற்காகவே



பெண்ணே..!!

நீ ஒரு எழுதுகோல்…
நான் ஒரு தாள்…!!

எதையேனும் எழுது
உன் இதயத்தால்…!!!

நீ எழுதுவதற்காகவே…
வெறுமையாயிருக்கிறது
என் இதயத் தாள்…!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அழகில் இல்லை காதல் என்றவள்



[நா(ன்) என்ன அழகாவா இருக்கேன்

என்ன போய் காதலிக்கறே

என்று கேட்ட காதலனுக்கு

காதலி சொன்னது…]

அழியும் அழகில்
இல்லை காதல்...

அழியாத அன்பில்
இருக்கிறது காதல் என்று...

இன்று உன்னிடம் பேச துடிக்கும் என்னை
வெறுப்பாய் பார்ப்பது ஏனடி?? -ஷபா!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

பிரியாதவை



பிரிந்திருக்கிற நேரத்தை,
உணர்ந்தறிவது கடினம் !
வலுவாய் வளர்ந்துவிட்டது,
ஒருவர்மேல் ஒருவருக்கான காதல் !
மேலும் !
இவர்களை பிரிப்பது பாவத்தைக்கூட,
கொணர்ந்து சேர்க்கும் !
பேசாமல் சிதைக்காமல் விட்டுவிடலாமே !
இந்த சிட்டுக்குருவிக்கூட்டை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் கவிதைகள்



=========================
நம் காதல் உயர்ந்ததற்கு
உன் பார்வைதான்,
ஏணி-படி..!!

இப்போது உன் பார்வை
வேறுபக்கம் சாய்கிறதே
ஏனிப்படி..?
=========================

=========================
உன் பார்வை மழையை
யாசிக்கும் நான் ஒரு
தாவரம்…!!! 

உன் பார்வையில்
தினமும் நனைய
எனக்குத் 
தா-வரம்…!!! 
=========================


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் சீண்டலின்றி தவிக்கும்



நீ மீட்டுவாய் என்பதற்காகவே
கவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன
என் விரல்கள்

உன் சீண்டலின்றி தவிக்கும்
என் கவிதைகளுக்காகவேனும்
சீண்டிச் செல்லடா
என் பேனா முனையை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் சீண்டலின்றி தவிக்கும்



நீ மீட்டுவாய் என்பதற்காகவே
கவிதை எழுதுவது போல் நடித்துக் கொண்டிருக்கின்றன
என் விரல்கள்

உன் சீண்டலின்றி தவிக்கும்
என் கவிதைகளுக்காகவேனும்
சீண்டிச் செல்லடா
என் பேனா முனையை..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் உன்னை தொலைக்கவில்லை



நீ பிரிந்ததால்

நான் உன்னை தொலைக்கவில்லை

நீ என்னுள்

தொடர்கிறாய் கவிதையாக !!!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

எனக்காக நீ - உனக்காக நான்



ஆசைதான் அதிகமானால்
அங்கம்தான் புனிதமாகும்
தேகங்களின் கூடலிலே
மோகத்தால் மூச்சடைக்கும்

ஆடையே பாரமாக
அச்சமோ தூரம் போக
அனைத்தவளே ஆடையாக
அவள் இதழ் எனை ஈரமாக்க

ஐந்தடி உடல்மூலம்
அகிலத்தை ரசித்தேன்
அழகிய இதழ்களிலே
அமுதத்தை ருசித்தேன்

போதும் என்று சொல்லி நடித்தாள்
போகசொல்லி அனைத்தேபிடித்தாள்

நீ தொடத்தான் நான் பிறந்தேன்
நான் தொடத்தான் நீ பிறந்தாய்
நாம் தொட்டோம் யார் பிறப்போ?
_ எங்கோ படித்ததில் ரசித்தது


கவிதைகள் உலகம் ..smdsafa..

திருட்டு நிலாவும்,திருந்தாத சூரியனும்



உனக்காக உயிர் நோக
கடலோரம் நான் நின்ற நேரம்,
நிலவொன்று நிஜமாகி
உன்னை தேடி வழி கேட்க,
பொய் சொல்ல தெரியாமல்
உன் முகவரி தந்து விட
பொல்லாத அந்த நிலவோ
உன்னழகு திருடி போகுமென
கனவில் கூட நான் நினைக்கவில்லை..!!

கேட்டவுடன் உன் அழகை
நிலவுக்கு தருவாய் என
எனக்கு தெரிந்திருந்தால்,
நிலவை மிரட்டி எனக்காக
இன்னும் ஏழெட்டு நிலவுகள்
படைத்திருப்பேன்..!!!

சதிகார அந்நிலவு இப்படி செய்யுமென
நீயும் எதிர்பார்த்திருக்க மாட்டாய்..!!
ஆம் அந்நிலவு சூரியனிடம்
உன்னை பற்றி சொல்ல
சூரியனும் பகல் மறந்து
கிளம்பி வருகிறான்
உன்னிடம் அழகை திருடி செல்ல...!!

இப்படியே போனால் எல்லா
நட்சத்திரங்களுக்கும் உன் முகவரி
நான் தர வேண்டியிருக்கும்..!!
என்னை மன்னித்துவிடு
உன் முகவரி தேடி நானும் வருகிறேன்
உன் அழகை திருடி செல்ல அல்ல,
உன்னை நட்சத்திரங்களிடமிருந்து காக்க..!!!

fb.com/kavithaigalulagam


கவிதைகள் உலகம் ..smdsafa..

அனைத்தும் உன்னால்



எனக்குள் ஒரு வசந்தம்

உன் வரவு,

எனக்குள் ஒரு மாற்றம் 

உன் நினைவு,

எனக்குள் ஒரு இன்பம் 

உன் உறவு,

எனக்குள் ஒரு துன்பம் 

உன் பிரிவு....


கவிதைகள் உலகம் ..smdsafa..

என்ன செய்வேன் என் மனதை


ஒடிக்க முடிந்தால்
ஒடித்திருப்பேன்
அழிக்க முடிந்தால்
அழித்திருப்பேன்
அறுக்க முடிந்தால்
அறுத்திருப்பேன்
வெட்ட முடிந்தால்
வெட்டி இருப்பேன்
ஆனால்
என்ன செய்வேன்
உன்னையே நினைத்து
ஏங்கும் என் மனதை
உன்னைப் போலவே
ஒளிந்து விளையாடுகிறது
என்னிடம்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

புதைவதும் ஆனந்தமே


அனைவரையும் வெறுத்த நீ
என்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..

இன்று அத்தனை பேரின் முன்னிலும்
என்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்
                                                    அதே உன் இதயத்துக்குள்..

புதைவதும் ஆனந்தமே..
                   உன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa


கவிதைகள் உலகம் ..smdsafa..

சந்திரகிரகணம்


சந்திரகிரகணத்திற்கு,

விஞ்ஞானம் ஏதோ

விளக்கம் சொல்கிறது..!!!

ஆனால்,

என்னைப் பொறுத்தவரை

உன்னை எது மறைத்தாலும்,

எனக்கு சந்திரகிரகணம் தான்…!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;