தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

அவள் என்னை பார்க்க தவறிய நாட்களில்



கசக்கி எறியும் காகிதமும்
கிறுக்கி தள்ளும் கடிதங்களும்
சில நேரம் தலையணையையும்
நனைத்துச் செல்லும்...,
அவள் என்னை
பார்க்க தவறிய நாட்களில்!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அடிமாடு



வரிசைகட்டி வாகனத்தில் நோஞ்சான் மாடுகள்,
சாலையோர ஜீவராசிகளை ரசித்தபடியோ வெறுத்தபடியோ !
தாம் வாழத்தகுதியற்றவர் என மனிதன் நிர்ணயித்துவிட்டான் !
எனும் பயங்கரத்தை அறியா பயணத்தை மேற்கொள்பவர்களாய் !
எங்காவது இறக்கி அங்கேயே முடிக்கப்படுவோம் என்பதறியாமல் !
கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற கொடூர எண்ணகர்கள் நமக்குள் !
நீ உதவாதுபோனால் உன்னையே வெட்டித்தின்ன சம்மதிக்குமா மதி ?
ஆறறிவு படைத்தது உழைத்துப்போட்ட ஐந்தறிவை அடித்துப்புசிக்கவா ?
மனிதா ! மனிதனா நீ ?
நாடுகேட்காதுபோனாலும் நாளை ஒரு மாடு கேட்கும் !
உயிர் வதைக்கும் உனை முட்டித்தூக்கும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் நினைவில் தூங்குது



உன் நினைவில்
தூங்குது என் நெஞ்சம் --
சுமையாக இருந்தும்
வலுவிழக்க வில்லை
என் இதயம் ---
உணர்வுகள் தட்டி
எழுப்புகிறது பசியை
புசிக்கிறேன் --
நம் நினைவுகளை


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் தனிமை



என் தனிமை
உன்னை நினைத்து
புலம்புகிறது
நீ தொலைவில்
இருப்பதால் ..
நித்திரையை தான்
விரும்புகிறது தனிமை
கனவு வரும் என்பதால்


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவளின் நினைவுகளில்



அவள் காதல் இன்று
என் கண்ணீராகவும்,
என் காதல் இன்று
அவள் நாட்குறிப்பின்
மிச்சமாகவும் தொடர்கிறேன்
அவளின் நினைவுகளில்
என் காதலை!


கவிதைகள் உலகம் ..smdsafa..

யோசிக்கிறேன்



நீ கண்ணீர் சிந்துவதில்
இல்லையடி வருத்தம்!
இத்தனை நாட்களாய்
என்னால் விழமுடியாத
அந்த விழிக்குள்
சிறு தூசி எப்படி
விழுந்தது என்று தான்
யோசிக்கிறேன்!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் ரசித்தது


உலகில் ரசிக்க ஆயிரம் இருந்தும்

அனைத்தையும் மறந்து நான் ரசித்தது

உன்னோடு பேசிய
இனிமையான நாட்களை மட்டும் தான் ♥ ♥ ♥

கவிதைகள் உலகம் ..smdsafa

..

சிட்டுக்கள்




உமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,
என் படுக்கையில் தூக்கத்தினூடே !
அந்தரத்தில் தொங்கும் தந்திக்கம்பிகளில்,
ஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் !
மொட்டைமாடிக்கு வரும்போதெல்லாம் ஓய்வின்றி,
வலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு !
எந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே !
எங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் !
துள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது !
அங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் !
காட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு !
காதில் விழுகிறது !!
"சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன"
எனும் செய்தி பற்றவைத்த தீயாய் !
விம்மிப் புடைக்கிறது நெஞ்சம் !
மரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் !
தனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் !
இனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் ?
தடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு ?
அவைகளை குழந்தைகளாய்ப்பார்த்து குழந்தையாகியிருக்கிறேன் !
அச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு !
சென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை !
என்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை ?
எதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி ?
கண்ணெதிரே அழிந்துவிட்டவரே !
காணக் கிடைப்பீரா இனி ?
உறவைத்துண்டித்த பறவைகளே சிட்டுக்குருவிகளே !!
"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்"



கவிதைகள் உலகம் ..smdsafa..

சொல்லாதவை



எவரும் சொல்லாததை சொல்லமுயன்று,
சொல்லெடுத்துப் போராடுகிற யுக்தியை,
காதல்தான் தருவித்தது....................
பலநேரங்களில் சொல்லாமலேயே,
மௌனமாயும் முடிந்துபோகிறது சொல்லவந்தது !
அவைகளை மனதுள் மறையும் தோல்விகள்,
என்று மடித்து முடித்துவைத்து விடாமல்,
முயற்சிகளின் சின்னங்கள் என்று,
முழுமையாய் ஏன் அங்கீகரித்து முகரக்கூடாது நீ !!
முயற்சிகளும் காதலிக்கப்படவேண்டும் முழுமையாய் பெண்ணே !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;