தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பெண்ணே நீ இல்லாததால்



கால்கள் இருந்தும் முடவனாக

கண்கள் இருந்தும் குருடனாக

காதுகள் இருந்தும் செவிடனாக

வாய் இருந்தும் பேசா மடந்தையாக

எல்லாமே இருந்தும் அனாதையாக

உள்ளேன் பெண்ணே நீ இல்லாததால்


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் 3



உன் பிறந்தநாளன்று

முதலாளாய் 12 மணிக்கே
வாழ்த்தவில்லையென

சண்டைக்கு வருகிறாய்.
நீ பிறந்த நேரத்தில்

வாழ்த்துவதற்காய்

நான் காத்திருந்ததை
எப்படி சொல்லிப் புரிய வைப்பது?


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலியின் பிறந்தநாள் கவிதைகள் 2



தன்

சாதனைப் பட்டியலில்
உன் பிறப்பை

முதன்மையாய்க்
குறித்து வைத்திருப்பான்

பிரம்மன்!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலியின் பிறந்தநாள் கவிதைகள் பரிசு 1



குட்டி தேவதையாய்
கண்களைச் சிமிட்டிக்கொண்டும்...
எச்சில் பிதற்றிய ஈர உதடுகளோடும்...
லேசாய் நிழலாய் தெரியும் அசைவுகளை
வெறித்துப்பார்த்துக்கொண்டும்...
புரியாத கொஞ்சல்களுக்கு புன்னகையோடும்...
காற்றில் சலசலக்கும் மயிலிறகாய்
தலை முடியோடும்...
பச்சைக் குருதி நரம்புகள் தெரியும்
சிவந்த பட்டு மேனியாய்...

பெருமையான உறவு



பிறப்பால் வந்த உறவுகள்

உதறிவிட்டு செல்லும்

எம் உணர்வுகளை

நட்பு மட்டும் தான்

உணர்வுகளால் வந்த

உறவு என்பதால்

உருகிக் கொண்டே இருக்கும்

கவிதைகள் உலகம் தமிழ் கவிதைகள்





கவிதைகள் உலகம் ..smdsafa..

உன்னை நேசித்ததால்



உன் நிழலை நேசித்து இருந்தால்

மண் மிது பரந்து இருப்பேன்

உன்னை நேசித்தால் மண் என்

மிது பரந்து இருக்கிறது


கவிதைகள் உலகம் ..smdsafa..

உந்தன் பதிலுக்காக



காகிதம் கிழித்ததற்கே

 "ஐயோ"!!! என்றவள்

நீ...

என் இதயம் கிழிந்ததற்கு

 என்ன சொல்ல

போகிறாய்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆதாரம்



அழித்துவிட்டேன் நீ பிரிந்ததும்,

என்னிடமிருந்த நம் காதலை,

உறுதிப்படுத்தும் ஆவணங்களை !

ஆனாலும்,

அதையெல்லாம் பாதுகாத்து,

இப்போது இழந்து பரிதவிக்கும்,

நானிருப்பதுதான் பாரமாகவே

தோன்றுகிறது !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நட்பு அன்பு காதல்



நாம் தேடமால்

 கிடைப்பது நட்பு ,

தேடினாலும்

  எளிதில் கிடைக்காது அன்பு,

தேட தேட

                தித்திப்பது காதல்


கவிதைகள் உலகம் ..smdsafa..

செடியில் பூத்த மலர் போல





என் வாழ்வும் செடியில்
பூத்த மலர் போல் தான்

செடி இதழ்கள் ஒரு முறை
தான் உதிரும்

நான் வாழ்க்கையில் பல
முறை உதிர்ந்து விட்டேன்

மண்ணுக்கு பிடித்த அளவுக்கு
மனிதனுக்கு பிடிக்க வில்லை

மண் என்னை மலர செய்கிறது
மனிதன் என்னை உதிர செய்கிறான்


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஒற்றையடிப்பாதை



சத்தம் எழுப்பாமல்

உனைத் தொடர்ந்து வந்து

காதல் சொல்கிறது

நீ நடந்து செல்லும்

ஒற்றையடிப்பாதை...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

கவிதைகள் உலகம் படங்கள்





கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;